இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் முடிவை நுகர்வோர் விவகார அதிகாரசபை எடுத்துள்ளது. இந்த முடிவை அதிகாரசபையின் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விலை திருத்தங்கள் நேற்று (அக்டோபர் 21) முதல் அமுலுக்கு வந்துள்ளன.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை...
பல அமைச்சுக்களின் நோக்கங்கள், செயல்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது, அண்மையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்துடன் இணைந்து வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அந்தத் திருத்தங்களின்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த சிவில் பாதுகாப்புத் துறை நீக்கப்பட்டுள்ளதுடன்,...
நாட்டில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்தார்.
அரிசிக்கு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேல் விலையில் விற்பனை செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
நெல் கொள்முதல் மற்றும் அரிசி விற்பனை நடவடிக்கைகள் வர்த்தமானி...
2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக...
2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை நுகர்வோர் விவகார அதிகாரசபை முன்னெடுத்த சோதனைகளின் அடிப்படையில், நீதவான் நீதிமன்றங்கள் ரூ.211 மில்லியன் அபராதம் விதித்துள்ளன.
நாடு முழுவதும் 14,682 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 2,800 சோதனைகள் அரிசி சந்தைகளில் நடைபெற்றுள்ளதுடன், அதிக விலைக்கு அரிசி விற்பனை தொடர்பாக 915 சோதனைகள் இடம்பெற்றன. இவ்வழக்குகள் தொடர்பாக மட்டுமே...
ஜனாதிபதி சிறப்புரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட, மூன்று மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி சிறப்புரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பாக, அரசியலமைப்பின் 121 (1) வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேலும் மூன்று மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக, சபாநாயகர் இன்று (21)...
செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 2,650 மாணவர்களையும், செவிலியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் ஆட்சேர்ப்பு செய்ய இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று வெள்ளிக்கிழமை (30.05.2025) நள்ளிரவுடன் முடிவடைந்தது.
அதன்படி, அந்தப் பெயர்களைக் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் இன்று சனிக்கிழமை (31.05.2025) தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட உள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட...
இலங்கை மின்சாரத் துறையின் மறுசீரமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், முன்மொழியப்பட்ட மின்சார சீர்திருத்த மசோதா அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய மசோதாவின்படி, இலங்கை மின்சார வாரியத்தை (CEB) 12 தனித்தனி நிறுவனங்களாகப் பிரிப்பதை நோக்கமாகக் கொண்ட முந்தைய விதிகள் நீக்கப்பட்டுள்ளன.
அதற்கு பதிலாக, திருத்தப்பட்ட மசோதா CEB-ஐ நான்கு நிறுவனங்களாக மறுசீரமைக்க முன்மொழிகிறது, இவை அனைத்தும்...
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தகவல் கிடைத்தவுடன், உள்ளூராட்சி நிறுவனங்களின்படி உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்...