வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் எங்குமில்லாதவாறு காணப்படும் இருக்கைகள்!
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில், எங்குமில்லாதவாறான இருக்கைகளை காணக்கூடியதாக உள்ளது. பயணிகள் பேருந்திற்காக காத்திருப்பதற்காக குறித்த இருக்கைகள் நிர்மாணிக்கப்பட்டன. ஆனால் தற்பொழுது குறித்த இருக்கைகள் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றன. மக்கள் குறித்த இருக்கைகளில் அமரமுடியாத நிலையில் காணப்படுகின்றன. அங்கவீனமுற்றவர்கள், முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் இவ்வறான இருக்கைகளில் அமரமுடியாமல் நெடு நேரம் காத்திருந்து பேருந்துகளுக்கு செல்ல வேண்டிய சிரமமான நிலைமை
வவுனியா பேருந்து நிலையத்தில் தகராறு..!
யாழிலிருந்து அக்கறைப்பற்று நோக்கி புறப்பட்ட அரச பேருந்து நேற்றைய தினம் (11) பிற்பகல் 1.30 மணி வேளையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற வேளையில் குறித்த பேருந்தின் நடத்துனர் மீது வவுனியா – கொழும்பு பயணிக்கும் தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதில் அரச பேருந்தின் நடத்துனர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற பால்புதுமையினர் நடைபவனி..
தங்களது உரிமைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாமும் உணர்வுகள் கொண்ட மனிதப் பிறப்புக்களே என்பது போன்ற கருத்தினை முன்வைத்து பால்புதுமையினர் நேற்று புதன்கிழமை (26.06) வவுனியாவில் நடைபவனியொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த நடைபவனி வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, நகர் வழியாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சென்றடைந்து நிறைவு பெற்றதோடு இதில் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர்.