நல்ல சில ஆன்மீக சிந்தனைகள் . சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் இரண்டு அவை:- புண்ணியமும், பாவமுமாகும் ஆகும்.
நீ செய்த புண்ணியங்களை – தருமங்களை – நீயே எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும்.
குறைய வேண்டியது பாவம்; நிறைய வேண்டியது புண்ணியம்.
நீ இறைவனுடைய கருணையைப் பெற வேண்டுமானால் அதற்கு வழி ஒன்று உண்டு.
துன்பமுற்றுத் துடிக்கிற உயிர்களிடம் நீ கருனை செய். அவற்றின் துன்பத்தை நீக்கு.
நீ பிற உயிர்களிடம் கருணை செய்தால்
கடவுள் உன்னிடம் கருணை செய்வார்.
கருணையால் கருணையைப் பெறலாம்.
இதனை ஒருபொழுதும் மறவாதே.
நீ அழுந்திவிடுவாய்.
வண்டிமேல் நீ ஏறு; வண்டி உன்மேல் ஏறக்கூடாது.





