Friday, July 10, 2026
No menu items!

Updates

துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது கைதிகள் வெளியேறுவதை தடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "நீ எம்மிடம்  சிக்கினால் கொன்று விடுவோம்" என அவர்களால் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது, டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் அவர் கடமைக்கு...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு 28 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதார அமைச்சின் தகவலின்படி, சிறைச்சாலை மோதலில் காயமடைந்த மேலும் 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட...

சிறைச்சாலையில் அதிகாரியின் துப்பாக்கிச் சூடு;பதில் ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது, சிறைச்சாலை நுழைவாயில் ஊடாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்தகுமார விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகள் உட்புற இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு, வெளிப்புற மரக்கதவை நோக்கி முன்னேறியுள்ளனர். அந்த பகுதியில் சிறைச்சாலையின்...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: ஐக்கிய நாடுகள் சபை கவலை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ள நிலையில், அது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் தமது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில்...

சிறைச்சாலை வன்முறை;12 பேர் தொடர்ந்தும் அவசர சிகிச்சை பிரிவில்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளைச் சந்தித்த அமைச்சர், அவர்களின் உடல்நிலை மற்றும் அவர்களுக்கு...

‘சிறைச்சாலை மோதல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கவில்லை’

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து எந்தவிதமான முன் கூட்டிய உளவுத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கைதிகளின் இடையூறுகளைத் தடுக்க அதிகாரிகள் முயன்றதாகவும், பாதிப்பின் அளவைக் குறைக்க அவர்கள் போராடியதாகவும் அவர் மேலும் கூறினார். இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை சந்திப்புக்கு பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், வன்முறை ஏற்பட்ட...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சூழல் தற்போது பாதுகாப்புப் படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், பெண் கைதிகள் தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல்களில் படுகாயமடைந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது...

நீர்கொழும்பு சிறை கலவரம்: 700 கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வன்முறையை தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 700 கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (05) இரண்டு கைதிகள் குழுக்களுக்கிடையே ஆரம்பித்த மோதல் அதிகரித்ததை அடுத்து, இன்று இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மோதல் விளக்கமறியலில் உள்ள கைதிகள் குழுவிற்கும்,...

சிறை மோதல் தொடர்பில் முழுமையான விசாரணைகள் இடம்பெறும்; நீதியமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதல் குறித்து தான் மிகவும்  அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும்  சிறைச்சாலைகள், நீதி அமைச்சின் பொறுப்பின் கீழ் உள்ளது என்ற வகையில் சம்பவத்திற்கு தானே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். சம்பவம் குறித்து (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், சிறைச்சாலையில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,...

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்;உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று ஞாயிறு (06)  ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதோடு காயமடைந்தவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்த பலருக்கும் கடுமையான துப்பாக்கி காயங்கள் ஏற்பட்டுள்ளன என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை சிறைக்குள்...
- Advertisement -

Latest News

இலங்கையில் ஒட்டிப்பிறந்த குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன!

இலங்கையின் வைத்தியத்துறை வரலாற்றில் ஒட்டிப்பிறந்த 5 வயது இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனை பாராட்டுக்களை பெற்றுவரும் அதேவேளை, நாட்டின் அரச சுகாதார துறையின் திறன்கள்...