கணினி இல்லாமல் ஒரு நாளைக் கூட நம்மால் கடக்க முடிவதில்லை. காரணம் அனைத்து வேலைக்கும் கணினி நமக்கு தேவைப்படுகிறது.
கணினியில் வேலை செய்யும்போது நாம் டைப் செய்யும் கீ போர்டில் பல பட்டன்கள் இருக்கும்.
அதிலும் குறிப்பாக F மற்றும் J ஆகிய பட்டன்களில் இரண்டு கோடுகள் இருப்பதைப் பார்த்திருப்போம்.
கீபோர்டில் உள்ள நடு வரிசை முகப்பு வரிசை நிலை என்று அழைக்கப்படுகிறது.
F மற்றும் J விசைகளில் உங்கள் வலது மற்றும் இடது கைகளை வைத்ததும் விசைகளை அணுகுவது மிகவும் எளிதாகிறது.
வேகமாக டைப் செய்வதற்கு இந்த இரண்டு கோடுகளும் மிகவும் உதவியாக இருக்கும்.








