குரு, சனிநவகிரகங்களின் கர்மா நாயகனாக விளங்கும் சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றுகிறார்.
இந்நிலையில் வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம், சனி பகவான் கும்ப ராசியில் இருந்து விலகி மீன ராசிக்கு இடம்பெயர்கிறார்.
அதேபோல், ரிஷப ராசியில் வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.
தொடர்ந்து மே மாதம் மிதுன ராசிக்கும் இடம்பெயர்கிறார். இதனால் மே மாதம் குரு பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு பெயர்ச்சியின் காரணமாக 2025ஆம் ஆண்டு 5 ராசியினரின் வாழ்வில் பொற்காலமாக இருக்கும்.
மேஷம்
நிதி நிலை முன்னேறும்.
தொழிலில் விரிவாக்கம் காண்பார்கள்.
புதிய தொழில் வாய்ப்புகளும் அமையும்.
தொழில் ரீதியாக 2025 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமாக இருக்கும்.
வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
அனைத்து பணிகளிலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும்.
திருமணம் ஆனவர்களின் திருமண வாழ்வில் இனிமை இருக்கும்.

ரிஷபம்
புத்தாண்டின் தொடக்கம் ஆக்கப்பூர்வமாக இருக்கும்.
ஆண்டின் தொடக்கத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்
நல்ல பணப் பலன்களைப் பெறலாம்.
முழுமையான அதிர்ஷ்டத்தை வாழ்வில் பெறுவார்கள்.
திடீரென்று பண வரவு அதிகமாகும்.
அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

சிம்மம்
பொருள் வசதிகள் மேம்படும்.
நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம்.
வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறலாம்.
புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பதவி உயர்வு மற்றும் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.

மகரம்
பல சுப நலன்களை அளிக்கும்.
குரு அருளால் வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெறுவார்கள்.
வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள்.
நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும்.
ஆடம்பர வாழ்க்கை அமையும்.






