Friday, April 17, 2026
No menu items!

News Updates

கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் பெறும் சலுகை நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

எரிபொருள் வாகனம் வைத்திருப்பவர்கள் கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் பெற அனுமதிக்கும் தற்காலிக சலுகை நாளை (18) நள்ளிரவுடன் முடிவடையும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபிசி) அறிவித்துள்ளது. இதற்கமைய கியூஆர் அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஒரு தற்காலிக நிவாரண ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்டது என்றும்,...

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக விசேட செப நாள் அறிவிப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் திகதியை செப நாளாக (விசேட பிரார்த்தனை நாளாக) இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபை அறிவித்துள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று இந்த விடயத்தை அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோரின் அன்புக்குரியவர்களின் கோரிக்கைக்கு அமைவாக , தாக்குதல்கள் குறித்த உண்மையை எல்லாம் வல்ல இறைவன்...

கோட்டை பேருந்து நிலைய சொத்துக்களுக்கு சேதம்;ஒருவர் கைது

அண்மையில் புதுப்பிக்கப்பட்டு, ஏப்ரல் 08 அன்று பொதுப் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்ட கோட்டை மத்திய பேருந்து நிலைய சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புனரமைக்கப்பட்ட பேருந்து நிலைய சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக பேருந்து நிலையத்தின் நலன்புரி பிரிவினால் முன்வைக்கப்பட்ட முறைபாடுகளைத் தொடர்ந்து, நேற்று (11)...

நிலக்கரி கொள்முதல் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் சி.ஐ.டியில் முறைப்பாடு

இலங்கைக்கு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிலக்கரி இறக்குமதி செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறையில் (CID) இன்று (ஏப்ரல் 11) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியின் செயலாளர் சமர்ப்பித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தணிக்கை அறிக்கைகள் மற்றும் நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளின்...

எரிபொருள் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது கியூ.ஆர் முறைமை கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே ராஜகருணா இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் வாகன இலக்க தகட்டின் ஒற்றை...

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளபக்கத்தின் ஊடாக இந்த அழைப்பை விடுத்துள்ளார். அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (United States Central Command), மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிகவும்...

கண்டியில் வெடிகுண்டு அச்சுறுத்தல்..!

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் ஊடாக கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தமுடியாத தகவல் ஒன்று கிடைத்துள்ளதால் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் இளைஞன் ஒருவர்!

தெற்கு பாணந்துறை பொலிஸ் பிரிவின் வாலன வீதிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த  ஒரு நபர் உயிரிழந்துள்ளார். கம்புருகமுவ, பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் நேற்று இரவு (08.12.2025) உயிரிழந்துள்ளார். இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணையில், பணத் தகராறு காரணமாக கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. பொலிஸாரல் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது, சடலம் பாணந்துறை வைத்தியசாலையின்...

புனரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கவனம்! நுவரெலிய மாவட்டத்தில் நீர்ப்பாசன கட்டமைப்பிற்கு சேதம்

தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் கிரகரி வாவியின் கண்காணிப்பு வழங்கும் பொறுப்பை நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் நுவரெலிய மாவட்ட செயலகத்தில் நேற்று (08) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. சீரற்ற காலநிலையினால் கொத்மலை...

வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீடிப்பு !!

​நாட்டின் பல பகுதிகளில்  'டிட்வா' சூறாவளி  (Cyclone Ditwah) மற்றும் கடுமையான வானிலையால் பரவலான இடையூறுகள் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) நீட்டித்துள்ளது. ஆரம்பத்தில் வரிக் கணக்குகள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மோசமான வானிலை காரணமாக...
- Advertisement -

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...