Monday, June 1, 2026
No menu items!

News Updates

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு;மழை வீழ்ச்சி தொடர்பிலும் எச்சரிக்கை

இலங்கைக்கு வடகிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போதும் நிலை கொண்ருப்பதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழையோ அல்லது பலத்த மழையோ காணப்படலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடமேல், மேல், சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும், வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த...

கொழும்பு டேம் வீதி கட்டிடத்தில் தீ விபத்து

கொழும்பு,டேம் வீதியில் (கேஸ்பா) உள்ள கட்டிடமொன்றில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, 10 தீயணைப்பு வாகனங்கள் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. சேதத்தின் அளவு அல்லது தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றம் வந்தடைந்த வியட்நாம் ஜனாதிபதி

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம், இன்று காலை இலங்கை நாடாளுமன்றத்தை வந்தடைந்தார். இலங்கையில் அவர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜனவரி முதல் 628 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது!

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, 2026 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் 628 வெளிநாட்டுப் பிரஜைகளை இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் மா அதிபர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்தார். நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே உதவி பொலிஸ் மா அதிபர் வூட்லர், இதனை தெரிவித்தார். குடிவரவு...

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தனியார் பேருந்து ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பட்டல்கல பகுதியில் வைத்து 35 அடி ஆழமான செங்குத்தான பள்ளத்தில் விழுந்துள்ளது. விபத்தில் ஹட்டனைச் சேர்ந்த...

தமிழக சட்ட சபை தேர்தல்; 62 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைப்பு

234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்றது. தேர்தலில் 85.10 % வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் எதிர்வரும் 4 ஆம் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திமுக, அதிமுக, தவெக நாம் தமிழர், ஆகிய கட்சிகள் மத்தியில் போட்டி...

ஷம்மி சில்வா பதவி விலக முடிவு!

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, எஸ்.எல்.சி செயற்குழுவுடன் இன்று நடைபெற்ற விசேடக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து பதவி விலக முடிவு செய்துள்ளார். அரசாங்கத் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து சில்வா பதவி விலக உள்ளார் என்று முன்னதாக பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான எரான் விக்ரமரத்ன, இலங்கை...

நிதியமைச்சில் மற்றுமொரு மோசடி;பிரான்ஸ் கடன் தொடர்பான கோப்புக்கள் காணாமல் போயின

பிரெஞ்சு வங்கி கடனை எதிர்காலத்தில் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புக்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக தி சண்டே டைம்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளையடித்த சம்பவத்தின் பின்னால் இருந்த அதே ஹேக்கர்களுடன் இந்த சம்பவம் தொடர்புடையதாக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன கோப்புகள்,...

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேல் மாகாணத்தின் வடக்கு குற்றப்பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை (24) இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும், "ஹோமகம ககனா" என அறியப்படும், வெளிநாட்டில்...

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை மற்றும் பேப்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புதிய சட்டப்பேரணை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இந்த பிரேரணைக்கு அனுமதி அளித்துள்ளன. இதற்கமைய 17 வயது மற்றும்...
- Advertisement -

Latest News

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும்,...