Monday, August 24, 2026
No menu items!

வர்த்தகம்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் திருத்தம்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின்  மொத்த மற்றும் சில்லறை விலைகள்  திருத்தப்பட்டுள்ளன. வர்த்தகர்களிடமிருந்து பொருட்களை அதிக இலாபத்துடன் வாங்க நுகர்வோருக்கு வழிகாட்டும் வகையில் ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 870 ரூபாவுக்கும், ஒரு கிலோ வெள்ளை சீனி 265 ரூபாவுக்கும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நெத்தலி 900 ரூபாவுக்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 320...

மீண்டும் உச்சத்தைத் தொட்ட கரட் விலை..!

நுவரெலியா கரட்டின் விலை  கடந்த (03) ஆம் திகதி 630 ரூபாயாக மொத்த விற்பனை விலையை கொண்டிருந்த வேளை இன்று (05) 200 ரூபாய் விலை அதிகரிப்பு ஏற்பட்டு கிலோ ஒன்றுக்கான மொத்த விற்பணை விலை 850 ரூபாவாக  உயர்வடைந்து காணப்படுகிறது. இதனை நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் இன்று (05) வெளியிட்டுள்ள விலை...

நாட்டில் சடுதியாக  அதிகரித்துள்ள தக்காளியின் விலை..!

நாட்டில் கரட் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த சில மாதங்களாக பெய்த கனமழை காரணமாக நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் நாசமடைந்துள்ளது. எனவே பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறிகளே இந்நாட்களில் சந்தைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய மொத்த விற்பனை நிலையங்களில் இன்றையதினம் (29)...

மீண்டும் ஆரம்பமாகவுள்ள இலங்கை – இந்திய கப்பல் சேவை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான திட்டமிடப்பட்ட பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையில்   பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவுகள் புத்துயிர் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரை இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை  பெப்ரவரி 15 முதல் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து...

திறைசேரிக்கு வழங்கி வைக்கப்பட்ட நிதி

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் இலாபமாகப் பெற்றுக்கொண்ட 1.5 பில்லியன் ரூபா நிதியை திறைசேரிக்கு வழங்கியுள்ளது. இதற்கான காசோலை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் நேற்று(26) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. குறித்த காசோலையை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக...

நடைமுறைப்படுத்தப்படவுள்ள VAT FREE SHOP

VAT இல்லா நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP என்ற தொடர் கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடுவெல பிரதேசத்தில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தமது அமைச்சின்...

நாளைமுதல் முட்டையின் விலை அதிகரிப்பு

சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இந்தியாவில் இருந்து  இறக்குமதி செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை நாளை (21) முதல் 43 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். VAT அதிகரிப்பால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையை 35 ரூபாய்க்கு விற்க முடியாததால் சதொச விற்பனை நிலையங்கள் முட்டை விற்பனைக்கு கட்டுப்பாடு...

நேபாள பிரதமருடன் உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்ட ரணில்

உகண்டாவின் கம்பாலா நகரில் அணிசேரா நாடுகளின் 19ஆவது மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் டஹாலுக்கும் (Pushpa Kamal Dahal) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் கலாசார மற்றும் மத உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் கலந்துரையாடியதுடன், இரு...

தங்க விலையில் திடீர் மாற்றம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற,இறக்கத்துடன் காணப்படும் நிலையில் நேற்று(19) இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வடைந்துள்ளது. இதன்படி, இலங்கையில் நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 650,652 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 22,960 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 183,650 ரூபாவாக...

மீன்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி

நாட்டில் மீன்களின் மொத்த விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் மீன் கொள்வனவுக்கான கேள்வி குறைந்துள்ளமை இதற்குக் காரணம் எனவும் பேலியகொடை மத்திய மீன் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, 1 கிலோ தலபத்தின் விலை 1500 ரூபாவாகவும், 1 கிலோ கிருல்ல...
- Advertisement -

Latest News

எல் நினோ தாக்கம்; நாட்டை சுற்றியுள்ள கடலின் வெப்பநிலை அதிகரிப்பு

நாட்டில் தற்போது நிலவும் எல்நினோ நிலைமையின் காரணமாக தீவைச் சுற்றியுள்ள கடலின் வெப்பநிலை மேலும் 1 செல்சியஸ் பாகையால் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எல் நினோவின்...