Monday, May 25, 2026
No menu items!

News Line

வங்காள விரிகுடாவில் தளம்பல்; நாட்டில் வடகீழ் பருவமழை மழை ஆரம்பம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடகீழ் பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக, திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, தென்,வடமத்திய, ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய...

நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டவர் உயிரிழப்பு

வெளிநாட்டுக்கு அனுப்புதல் தொடர்பாக பண மோசடி குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வவுனியா நீதிமன்றத்தால் இன்று செவ்வாய்க்கிழமை (28) பிணையில் விடுவிக்கப்பட்டார். வெளிநாடு செல்வதற்கு சிலர் குறித்த நபர் ஊடாக வேறொரு நபருக்கு பணம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்டவர் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமையால், குறித்த நபருக்கு எதிராக...

இன்னும் இரண்டு நாட்கள் நீடிக்கும் போர் நிறுத்தம் – கட்டார் அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்கள் நீடிப்பதற்கு இரு தரப்பும் இணங்கியுள்ளன. நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தம் நடைமுறைபடுத்தப்பட்டு முடிவிற்கு வருவதற்கு சற்று முன்னர் கட்டார் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மூன்று வயது சிறுவன் உட்பட 11 பணயக்கைதிகளையும் சேர்த்து ஹமாஸ் 50 பணயக்கைதிகளையும் விடுதலை செய்துள்ளது. இதேவேளை, 30 சிறுவர்கள்...

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்: சுனாமி அச்சுறுத்தல் இல்லை

பப்புவா நியூ கினியாவின் வடக்கு கடற்கரையில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் தீவு மாநிலத்தின் கிழக்கு செபிக் மாகாணத்தின் தலைநகரான வெகாக் நகரிற்கு அண்மையிலுள்ள கடற்கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை...

2024 சாதாரண தர பரீட்சை மே மாதத்தில்

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண தர) பரீட்சையை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு அனைத்தும் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நேற்று (27) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், பரீட்சை பெறுபேறுகள் குறித்து கூறிய அவர், இன்னும் 2 அல்லது...

இறப்பர் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து; உயிரிழப்புகள் எதுவுமில்லை

மீரிகம – தங்கோவிட்ட இறப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத் தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த இறப்பர் தொழிற்சாலையில் நேற்று (27) இரவு 9.20 மணியளவில் பரவிய குறித்த தீயை இன்று காலை வரை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போயுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தொழிற்சாலையில் பணி புரிந்த...

ஐ.பி.எல் போட்டியில் நீடிக்கும் மதீஷ, மஹீஷ்; ஏனைய இலங்கை வீரர்கள் ஏலத்தில்

17 வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில் பத்து அணிகளும் தாம் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை நேற்று முன்தினம் (26) வெளியிட்டன. இப்பட்டியலில் இலங்கை அணியின் இரு வீரர்கள் மாத்திரமே தங்கள் அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய ஐ.பி.எல் அணிகளில் விளையாடிய இலங்கை வீரர்களை அந்த...

புதிய அவதாரமெடுக்கும் ஷகிப் அல் ஹசன்

பிரபல பங்காளதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் அரசியலில் களமிறங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது நாட்டின் 12 வது பாராளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாவட்டமான மகுரா-1 தொகுதியில் போட்டியிடவுள்ளார். இத்தேர்தலில் அவாமி லீக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளார் எனவும் இத்தேர்தல் ஜனவரி 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது எனவும் ஊடகங்கள்...

அனைவருடனும் இணைந்து கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் சுத்தப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளேன்  -ஹரின் பெர்னாண்டோ

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (27) விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இது மிக முக்கியமான பொறுப்பாகும்....

இன்றும் சில இடங்களில் பிற்பகல் மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (28) இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய மாகாணங்களில், இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...
- Advertisement -

Latest News

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம்...