மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி ‘பெண்கள் வலுவூட்டல்களுக்கான யோகா’ எனும் கருப்பொருளில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இன்றைய தினம் (19.06) இடம் பெற்றுள்ளது.
குறித்த யோகா நிகழ்வில் இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சாய் முரளி பிரதம விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
மேலும் யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரி நாகராஜன் நானாட்டான் டிலாசால் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் மனோ நானாட்டான் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
Post Views: 2