November 17, 2025
பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு…!
உள்நாட்டுச்செய்திகள்

பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு…!

May 25, 2024

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5,320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று  (25)காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்நிகழ்வில்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர்  பி.எஸ்.எம். சார்ள்ஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , தர்மலிங்கம் சித்தார்த்தன், சுகாதாரத்துறை அதிகாரிகள்,  வைத்தியசாலை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *