வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (01) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய முன்னறிவிப்பில் இது கூறப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. வரையிலான கனமழை பெய்யக்கூடும்.

மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here