அம்பாந்தோட்டை ஹுங்கம,கலமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூன்று பாடசாலை மாணவர்களில் இருவரின் உடல்கள் இன்று காலை (31) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று மாணவர்கள் காணாமல் போயிருந்தனர், அவர்களில் 18 மற்றும் 12 வயதுடைய மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தங்காலை பொலிஸின் உயிர்காக்கும் பிரிவு, கடற்படை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் காணாமல் போன மற்றொரு மாணவரைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் ஹுங்கம பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினரும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.








