தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் கொள்வனவுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் பெப்ரவரி 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அந்தவகையில் நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.








