மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு ஏற்ப அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பொருட்களின் விலை குறையும் என்று அகில இலங்கை சிறுதொழில் வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நேற்று (20) முதல், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான மின்சாரச் செலவுகள் குறைந்துள்ளதாகவும், இதன் விளைவாக, பொருட்களின் விலை 5% முதல் 10% வரை குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சுமார் இரண்டு வாரங்களில் சந்தைக்கு வழங்கப்படுமென்றும், இதனால் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here