முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே 19 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மஹர நீதவான் நீதிமன்றம் இன்று குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியொன்றைப் போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.








