350 வகையான மருந்துகளின் விலை உடனடியாகக் குறைப்பு: தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!
350 வகையான மருந்துகளின் விலைகள் உடனடியாக குறைக்கப்பட்டுள்ளதாக டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் துறையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தை நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களுக்கு வழங்கப்படும் 350
வியட்நாமில் தொடரும் சீரற்ற காலநிலை- 6பேர் உயிரிழப்பு!
வியட்நாமில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பேருந்து மீது கற்பாறைகள் வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 32 பயணிகளுடன் சென்ற குறித்த பேருந்து மீது பாறைகள் வீழ்ந்ததால் பேருந்தின் முன்பகுதி நசுங்கியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை
கடலில் மிதந்த 100 கிலோகிராம் போதைப்பொருள் !
மேல் மாகாண காவல்துறை குற்றப்பிரிவு மற்றும் இலங்கை கடற்படையினர் இன்று (18) காலை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்குரிய சுமார் 100 கிலோகிராம் போதைப்பொருள் அடங்கிய இரண்டு பார்சல்களை மீட்டுள்ளனர். பேருவளையிலிருந்து 2.5 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்து கொண்டிருந்த போதே இதனை கைப்பற்றியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், 20–25 கிலோகிராம் அளவுள்ள சந்தேகமான ஒரு பார்சல்
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்: கடந்த 11 மாதங்களில் 2,183 முறைப்பாடுகள்!
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சில் வழங்கப்படும் 1938 என்ற கட்டணம் இல்லா துரித அழைப்பு இலக்கத்தில் கடந்த 11 மாதங்களில் 2,183 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், வீட்டு வன்முறை சம்பவங்கள் 1,488 முறைப்பாடுகள் இணையக் குற்றங்கள் 234 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான முறைப்பாடுகள் 7 ஆகியன பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை பெண் பாதுகாப்பு, வன்முறை தடுப்பு
வாகரை பகுதியில் மனைவியை கொலை செய்த கணவன்!
வாகரை பொலிஸ் பிரிவின் உரியங்கட்டுவ பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர் தட்டமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் தெரியவந்ததாவது, இளம் மனைவியும் அவரது கணவரும் இடையே ஏற்பட்ட தகராறில், கணவர் மின்விசிறி கம்பியால் தனது மனைவியின் கழுத்தை நெரித்து
வெலிமடையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் தம்பதியினர் அடித்துச் செல்லப்பட்ட துயரச் சம்பவம்!
வெலிமடை – பொரலந்த – கண்டேபுஹுல்பொல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் திருமணமான தம்பதியினர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிமடை பிரதேச செயலகப் பிரிவில் நேற்று (17) மாலை பெய்த கனமழையால் இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
2030-ஆம் ஆண்டுக்குள் தேயிலை ஏற்றுமதி வருமானம் 2.5 பில்லியன் டொலராக உயர எதிர்பார்ப்பு!
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பொது முகாமையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 6ஆவது ஆசிய தேயிலை கூட்டமைப்பு உச்சிமாநாடு மற்றும் ஆசியத் தேயிலை கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொண்டதுடன் இது தொடர்பான ஊடகவியலாளர்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: இனவாதமாக மாற்ற வேண்டாம் – நாமல் ராஜபக்ஷ!
திருகோணமலை புத்தர் சிலை தொடர்பான பிரச்சினையை இனவாத திசை நோக்கி தள்ளுவதற்கு இடமளிக்கக் கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (17) கருத்து வெளியிட்ட அவர், அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை அமைதியாகத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். அவர் மேலும்
அமெரிக்காவுடன் வரிகள் தொடர்பான ஒப்பந்தம் இன்னும் இல்லை – வெளிவிவகார அமைச்சர் விளக்கம்!
அமெரிக்காவுடன் பரஸ்பர வரிகள் தொடர்பாக இலங்கை இதுவரை இறுதி ஒப்பந்தத்தை எட்டவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், இலங்கை–அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் இதுவரை 17 சுற்றுகள் முடிந்துள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது குறிப்பிட்டார். இந்த பேச்சுவார்த்தைகளின் பயனாக, இலங்கைக்கான சில
காஸா தொடர்பான ட்ரம்ப்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கீகரிப்பு!
காஸா பகுதியில் நடைபெற்று வரும் போருக்கு முடிவுகாணும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நேற்று அங்கீகரித்தது. சர்வதேச உறுதிப்படுத்தல் படையை அமைத்தல் மற்றும் பாலஸ்தீன அரசை உருவாக்கும் பாதையை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட திட்டமாக இது விவரிக்கப்படுகிறது. குறித்த தீர்மானத்திற்கு பாதுகாப்புச் சபையின் 13 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.