Tamil News Channel

Blog Post

Tamil News Channel > Articles by: Angel Angelin

மதுவுக்கு பின்னால் மரணம்: தம்பர பகுதியில் தடியால் தாக்கப்பட்டு முதியவர் கொலை!

நேற்று இரவு ஹொரணை பொலிஸ் பிரிவின் தம்பர பகுதியில் தடி ஒன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர் 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தம்பர, மீவனபலான பகுதியைச் சேர்ந்தவராவார். தனது வீட்டில் உறவினர் ஒருவரின் மகனுடன் மது அருந்திக்கொண்டிருந்த வேளையில், இருவருக்கிடையிலான வாக்குவாதம் மோசமாக மாறி, அந்த நபர் தடியால் தாக்கியதனால் இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் 43 வயதுடைய சந்தேகநபர் கைது […]

Read More

போதை மாத்திரைகள் விற்பனைக்காக வந்த கொழும்பு இளைஞர் யாழில் கைது – இரகசிய தகவலில் செயல்பட்ட புலனாய்வுப் பிரிவு!

யாழ்ப்பாணத்தில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் செயல்படும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற்று வந்த வேளையில், சந்தேகநபர் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர் கொழும்பைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் […]

Read More

இஸ்ரேல்–ஈரான் பதற்றம்: அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கை அரசின் வேண்டுகோள்!

இஸ்ரேலும் ஈரானும் தற்போதைய பதற்ற நிலையைத் தவிர்த்து, அமைதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென இலங்கை அரசு வேண்டுகோள்விடுத்துள்ளது.. இரு நாடுகளுக்கிடையேயான சமீபத்திய சம்பவங்கள் தொடர்பாக தீவிர கரிசனையை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கைத்தூதரகங்கள் முழுமையான கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அந்த நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் தொடர்பாகவும் அவ்வப்போது தகவல்களைப் பெற்றுவருவதாகவும், அவர்கள் அந்நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் எனவும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், பதற்றங்களை குறைக்கும் […]

Read More

அவுஸ்திரேலியாவுடன், இலங்கை வணிக உறவுகள் விரிவடைகிறது: தேயிலை, இறப்பருக்கு அப்பால் பல்துறை ஏற்றுமதி திட்டம்!

இலங்கையுடன் உள்ள வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பாரம்பரியமான தேயிலை, இறப்பர் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் மட்டும் அல்லாமல், ஏற்றுமதியை பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தும் வாய்ப்புகள் குறித்து இலங்கை அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக மெல்போர்னில் அமைந்துள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சந்தையை விரிவாக்கும் முயற்சிகளும், மூலோபாய அடிப்படையிலான முதலீட்டு வாய்ப்புகளும் தொடர்பாக இரு நாடுகளும் உடன்பாடிற்கு வந்துள்ளதாகவும் […]

Read More

சீனி வரி குறைப்பால் 1,600 கோடி நட்டம்: குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என சட்டமா அதிபர் அறிவிப்பு!

2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் சீனிக்காக விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரியினை 25 சதம் வரை குறைத்த விடயம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் எவ்விதமான குற்றவியல் குற்றமும் கண்டறியப்படவில்லை எனச் சட்டமா அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்வாறு அறியப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, விசாரணைகளை நிறைவு செய்வதற்கு அனுமதி வழங்கிய நீதவான், இந்தச் சம்பவத்தில் […]

Read More

வட்டுக்கோட்டையின் முக்கியத்துவத்தை குறைக்க திட்டமிட்ட முயற்சியா? கலாநிதி சிதம்பரமோகன் கேள்வி!

வடக்கு மாகாணத்தின், யாழ்ப்பாண மாவட்டத்தில்முக்கிய இடமாக விளங்கிய வட்டுக்கோட்டை திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றதா? என்ற ஆச்சரியத்தையும் கவலையையும் கலாநிதி சிதம்பரமோகன் வெளியிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கருத்தில் தொடர்ந்து அவர், சங்கானையை நகர சபையாக உயர்த்த வேண்டும் என்றும், வட்டுக்கோட்டையை பிரதேச சபையாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். வட்டுக்கோட்டை திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா? எனும் கேள்வியையும் […]

Read More

காசா போர் நிறுத்தம்: ஐ.நா. தீர்மானத்தில் இலங்கை ஆதரவு, இந்தியா நடுநிலை!

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரிலிருந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே, மோதல் நடந்து வருகிறது. காசாவில் இதுவரை, 55,000க்கும் மேற்பட்டோர் இந்த போரில், இறந்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய நாடுகளின், பொதுச் சபையில் ஸ்பெயின் சார்பில் போர் நிறுத்த தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. […]

Read More

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பபட்ட போராட்டம் !

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (12) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பபட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது மக்கள் அரசியல் தலைப்புகளின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது. புற்றுநோய் பிரிவின் மீது முன்வைக்கப்படும் அழுத்தம் மற்றும் வைத்திய நிர்வாகியை மாற்றல் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து கோசங்கள் எழுப்பபட்டன. எங்கள் வைத்தியசாலையை மீட்டு எடுப்போம், புற்று நோய் பிரிவை காப்பாற்றுவோம் என்பது பிரதான கோசமாக முன்வைக்கப்பட்டது.  (யாழ் நிருபர்-லோஜன் விஜயகுமார்)

Read More

அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இல்லாத மருந்து வழங்கல் ; சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இல்லாத மருந்து வழங்கல் உறுதிப்படுத்தப்படும் என  சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ உறுதி அளித்துள்ளார். இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் (Marc-André Franche) திரு. மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச்சேவுடன் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த சந்திப்பு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, நாட்டின் சுகாதார சேவை மற்றும் ஊடகத் துறையின் தற்போதைய நிலை, அத்துடன் நாட்டின் சுகாதார […]

Read More

துசித ஹல்லொலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரசு சொத்துக்களை குற்றவியல் முறையில் தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு தொடர்பாக அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். துசித ஹல்லொலுவ இன்று (ஜூன் 13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More