இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (10) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 24 சதம், விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 75 சதம்.
தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி..!!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தென்னை உற்பத்தித் துறையில் மாற்றம் தரும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். வடக்கு தென்னை முக்கோண வலய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின் பசுமை பொருள்
எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்..!!
ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 3,690 ரூபாயுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ
உலக சந்தைகளில் அதிகரித்துள்ள உரவிலைகள்!
உலக சந்தைகளில் உரவிலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் உள்நாட்டிலும் காணப்படுவதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த் தெரிவித்துள்ளார். மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை கூறியுள்ளார். உர விலைகள் உயர்வது ஒரு பொது சவாலாக இருந்தாலும், சலுகை விலையில் உரங்களை வழங்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
14 ஆண்டுகளுக்கு பின் வெள்ளி விலை உச்சம்!
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சுமார் 14 ஆண்டுகளின் பின்னர் பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகச் சந்தைத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க வரிக் கொள்கை, மற்றும் தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளமை என்பன இதற்கான காரணங்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3 வீத அதிகரிப்புடன், 39.40 டொலர்களாக விற்பனை செய்யப்படுகிறது. இது, 2011
இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (9) அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.62 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.39 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய
உலக வாணிபம் வீழ வாய்ப்பில்லையென உறுதி: ஆசியாவே இப்போது உலகமயமாக்கலின் இயக்க சக்தி!
தற்போதைய உலகில் மக்கள் 2008 நிதி முறிவு, பிரெக்ஸிட், ட்ரம்ப்பின் ஆட்சி, கோவிட், மற்றும் தற்போதைய வர்த்தகப் போர்கள் போன்ற பல பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இத்தகைய சூழ்நிலைகள் உலகமயமாக்கலின் முடிவை வரவேற்கின்றன என்று பலர் கருதினாலும், உண்மையில் உலக வர்த்தகம், முதலீடு, மற்றும் தீர்வுகள் தொடர்ந்து அதிலிருந்து மீண்டுவருகிறன. இந்நிலையில் பார்க்கும்போது, மேற்கத்திய நாடுகளை விட ஆசியாவே
தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்…!!
ஹட்டன் நகரில் தேங்காயின் விலை கணிசமானளவு குறைவடைந்துள்ளதால் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேங்காய் வருமானம் அதிகரித்துள்ளதாக ஹட்டன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை 100 ரூபாவிலிருந்து 170 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தேங்காயின் விலை மேலும் குறைவடைவதற்கான
அமெரிக்கா – சீனா இடையே TikTok ஒப்பந்த பேச்சுவார்த்தை: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜூலை 4ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிரபலமான குறுந்தொடர் வீடியோ பயன்பாடு TikTok தொடர்பான ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளை ஜூலை 7 அல்லது 8ஆம் திகதி சீனாவுடன் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். “நாங்கள் இதற்கான ஒப்பந்தத்தை பெரும்பாலும் உறுதிசெய்துள்ளோம். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை நேரடியாகவோ அல்லது அவரது பிரதிநிதிகளின் மூலமாகவோ திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை
முதல் ஆறு மாதங்களில் 1 டிரில்லியன் ரூபாய் வருவாயை கடந்த இலங்கை சுங்கத் திணைக்களம்!
இலங்கை சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,000 பில்லியன் ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட நேற்று தெரிவித்தார். கொழும்பில் நேற்று (ஜூலை 3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த ஆண்டுக்கான வருவாய் இலக்கை தாண்டுவதற்கான வாய்ப்பு உள்ளது என அவர் கூறினார். மேலும் இந்த ஆண்டிற்கான அரசு வழங்கிய