Friday, July 10, 2026
No menu items!

Updates

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 76 ஆண்டுகள் பூர்த்தி

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் இன்று(04) காலிமுகத்திடலில் நடைபெற்றது. 'புதிய நாட்டை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. இவ்வாண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்குப் பிரதம விருந்தினராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொள்கின்றார். சுதந்திர...

வவுனியா பொலிஸாரின் மீது தாக்குதல்

வவுனியா - புளியங்குளம் பொலிஸ் நிலைய வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் வாகனத்தில் சென்றுள்ளனர். இதன் போது குறித்த வாகனத்தின் மீது வீதியில் நின்ற நபர் ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா மாவட்ட நீதிவான்...

முன்னாள் இராணுவ சிப்பாய் தாக்கப்பட்டு கொலை

கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை பிரதேசத்தில் திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரிடம் விசாரிக்க சென்ற 32 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவ சிப்பாயின் வீட்டிற்குள் நுழைந்த சில சந்தேக நபர்கள் இவரது மனைவியின் தங்க மாலையை திருடிச்சென்றுள்ளனர். இது தொடர்பில் குறித்த...

இலங்கைக்கு கிடைத்துள்ள அமெரிக்க டொலர்கள்

இலங்கை அரசாங்கம் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடம் (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பான நிதி ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்த கடன் வசதியை பெற்றுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும்...

ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண காலிறுதிப் போட்டி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரில் இன்றைய தினம் காலிறுதிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. அதற்கமைய இன்றைய தினம் 2 காலிறுதிப்போட்டிகளும் நாளைய தினம் 2 காலிறுதிப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. இன்றைய நாளின் முதலாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் ஜோர்டான் ஆகிய அணிகள் மோதுகின்றனர். இப் போட்டி மாலை 05 மணியளவில் அஹமட் பின் அலி மைதானத்தில்...

நைரோபியில் பாரிய எரிவாயு வெடி விபத்து.

கென்யா தலைநகர் நைரோபியில் இடம்பெற்ற எரிவாயு வெடி விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 220க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் எம்பகாசி மாவட்டத்தில் எரிவாயுசிலிண்டர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த லொறி வெடித்து சிதறியதிலேயே இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள், சேதமடைந்துள்ளதையும் தீவிபத்து பல தொடர்மாடிகளிற்கு பரவியுள்ளதால் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெடிவிபத்துக்கள், தீப்பிளம்புகள், மேலும் ...

யாழில் குழந்தை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு

யாழில் மாதகல் மேற்கு பகுதியைச் சேர்ந்த குழந்தை பிரசவித்த இளம் தாய் ஒருவர் நேற்றைய தினம்(02) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதன்போது அவருக்கு கடந்த 23 ஆம்...

உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்

எதிர்வரும் பண்டிகை காலத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதென  விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள ஒரு வீதம் இரும்பு மற்றும் போலிக் அமிலம் சேர்க்கப்பட்ட அரிசி அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஐந்தாம் வகுப்புக்கு கீழ் உள்ள...

நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு இடம்பெறலாமென எச்சரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பதுளை மாவட்டத்தின் மீகாஹாகிவுல,  கேகாலை, மாத்தளை மாவட்டத்தின் கொடபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்படுவதாக அறிக்கையில்...

நாட்டுக்கு பொருளாதார சுதந்திரம் இன்னமும் கிடைக்கவில்லை: திஸ்ஸ விதாரண

நாட்டுக்கு இன்னமும் பொருளாதார சுதந்திரம் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். 1948ம் ஆண்டில் இலங்கைக்கு அரசியல் ரீதியான சுதந்திரம் கிடைக்கப்பெற்ற போதிலும் பொருளாதார சுதந்திரம் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் அணிசேரா கொள்கைகளிலிருந்து விடுபட்டு அமெரிக்க அடிமைத்துவ கொள்கைகளை முன்னெடுப்பதாகவும், எமது காணிகள் மற்றும் வளங்களை வெளிநாடுகள் சுரண்டுவதனை தடுத்து உள்நாட்டு...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...