Saturday, July 11, 2026
No menu items!

Updates

நண்பர்களுடன் போதைப் பொருள் பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்..!

புத்தளம், நுரைச்சோலை, ஆலங்குடா பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள்  நண்பர்களுடன் இணைந்து ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் போதைப் பொருளை பயன்படுத்தியதைக் கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், ஏழு இளைஞர்களைக் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 1,200 மில்லிகிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பொலிஸ்...

தமிழர் நிலங்களை அபகரிக்காதே மயிலிட்டியில் எதிர்ப்பு..!

மயிலிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக நேற்றைய தினம்(23) போராட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம் இராணுவமே வெளியேறு எனவும் தையிட்டி எங்கள் சொத்து,  அடக்கு முறைக்கு அடிபணியமாட்டோம்,   இனப்படுகொலை ராணுவமே வெளியேறு,   சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை காவலா?, அபகரிக்காதே அபகரிக்காதே தமிழர்...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் சாதனை..!

இலங்கையில் உள்ள சகல மக்களும் விரும்புகின்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே ஆவார்  என்றும் தேர்தலில் ரணிலின் வெற்றி, இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் சாதனையாகப் பதியப்படும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  குறிப்பிட்டுள்ளார். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் ஐக்கிய...

பேருந்தில் தவறி விழுந்து இளைஞன் ஒருவர் பலி..!

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்றைய தினம்  (23) காலை பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பேருந்தில் சென்ற குறித்த இளைஞன் கீழே விழுந்த நிலையில் பேருந்தின் சில்லுக்குள் நசியுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் யாழிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பணியாற்றும்...

சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்..!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று (22) ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது இன்று (23) மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த  போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

வவுனியாவில் 67 யானைகள் பலி..!

வவுனியா மாவட்டத்தில் 2019ம் ஆண்டு தொடக்கம் 2024 வரை 67 யானைகள் பலியாகியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செட்டிகுளம், நெடுங்கேணி, வவுனியா உட்பட வனத்தினை அண்மித்த பகுதிகளிலில் அனுமதியற்ற சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கியும், வெங்காய வெடி, துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியும் (சட்டவிரோத துப்பாக்கி) தொடருந்து விபத்துக்களாலும் இவை பலியாகியுள்ளன. மேலும் 05 வயது...

ஸ்பெயினில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய தீ விபத்து..!

ஸ்பெயினின் வலென்சியா நகரில் கம்பனார் என்ற பகுதியில் உள்ள 14 அடுக்குகளை கொண்ட தொடர்மாடிக்கட்டிடமொன்றில்  நேற்றைய தினம் (22)  பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியானதோடு 14 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு இந்த கட்டிடத்தில் 138 வீடுகள் உள்ளதாகவும் 450க்கும் அதிகமானவர்கள் வசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை..!

இலங்கை மின்சார சபையினால் கையளிக்கப்பட்ட புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில், அவதானத்தை செலுத்தி மின்கட்டணத்தை குறைப்பதற்கான சதவீதத்தை அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எம்.ஆர்.எம் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, நேற்றைய தினம்  (22) கையளித்துள்ளது. 2023 அக்டோபர் மாதத்தில் மின்...

அரசியலுக்கு வருமாறு சனத் நிஷாந்தவின் மனைவிக்கு அழைப்பு..!

கடந்த மாதம் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கெரவளபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியை அரசியலுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே...

40,000க்கும் அதிகமான போலி மருத்துவர்கள்!- ஆபத்தில் மக்கள்..!

நாடு முழுவதிலும் 40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக செயற்படுவதாக  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...