மயிலிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக நேற்றைய தினம்(23) போராட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம் இராணுவமே வெளியேறு எனவும் தையிட்டி எங்கள் சொத்து, அடக்கு முறைக்கு அடிபணியமாட்டோம், இனப்படுகொலை ராணுவமே வெளியேறு, சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை காவலா?, அபகரிக்காதே அபகரிக்காதே தமிழர் நிலங்களை அபகரிக்காதே ஆகிய பல கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.