November 13, 2025
நாட்டில் அதிகரிக்கும் மழை நிலை
News News Line Top Updates புதிய செய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் மழை நிலை

Nov 30, 2023

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு அருகில் விருத்தியடைந்துள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (30) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும், வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *