பூமி  கதிரவனிலிருந்து மூன்றாவதக உள்ள கோள். விட்டம், நிறை, அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய உட் கோள்களிள் புவியும் ஒன்று. இதனை நீல்க்கோள் என்றும் குறிப்பிடுகிறார்கள். இது அதிக அளவு நீரைக் கொண்ட கிரகம் மற்றும் உயிர்கள் வாழ்வதற்கான சிறந்த கிரகமாகவும் இது காணப்படுகிறது.

பூமி சுற்றுவதை நிறுத்திவிட்டால் என்ன செய்வது என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்தீர்களா?

பூமியின் சுழற்சியின் காரணமாக தான் இரவும் பகலும் வருகிறது. இதனால் பருவங்களும் மாறுகின்றன. இவ்வாறு பூமியில் நிகழும் மாற்றங்கள் நின்றுவிட்டால் என்ன ஆகும்? அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பூமி சுற்றிக் கொண்டு இருப்பதை நீங்கள் ஒரு போதும் உணர முடியாது. காரணம் நீங்களும் அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றீர்கள்.

அதன் சொந்த இயக்கத்திற்கு அதிகமாக பூமியும் சூரியனைச் சுற்றி வருகிறது. இதற்கு உதாரணமாக நீங்கள் நியூட்டனின் முதலாம் விதியை எடுத்துக்கொண்டால்.

முதல் விதியின்படி, ஒரு பொருளின் மீது புறவிசைகள் செயல்படாதவரை, அப்பொருளானது தன்னிச்சையாக தனது இயக்க நிலையை மாற்றிக்கொள்ளாத பண்பு அதன் நிலைமம் எனப்படும். ஒரு பொருள் ஓய்வில் இருந்தால், அது தொடர்ந்து ஓய்வில் இருக்கும், அல்லது அது இயக்கத்தில் இருந்தால் அது அதே வேகத்தில் அதே திசையில் இயக்கத்தில் இருக்கும். மற்றும் எதிர் சக்தி அதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

பூமி மணிக்கு  சுமார் 1,000 மைல் வேகத்தில் சுற்றுகிறது. இது ஒலியின் வேகத்தை விட அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.

பூமியானது சுற்றுவதை நிறுத்திவிட்டால் இரவும் பகலும் வருவது நின்று விடும். பூமியின் ஒரு அரைவாசியில் 6 மாதங்கள் இரவும் மறு அரைவாசியில் பகலும் இருக்கும்.

பகல் இருக்கும் இடத்தில் அதிக வெப்பமும், இரவில் கடும் குளிரும் காணப்படும். கடல் நீர் விநியோகம் தடைபடும்.

பூமியில் வாழும் மனிதக்குலத்தின் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படும். அரைவாசி மக்கள் 6 மாதங்கள் இரவிலும் மீதி 6 மாதங்களை பகலிலும் கழிப்பார்கள்.

தாவரங்களின் தன்மை மாறும். வெப்பத்தின் காரணமாக மக்கள் அனைவரும் வாடுவார்கள். பல நோயிற்கு உள்ளாக்கப்படுவார்கள்.

பூமியின் சொந்த சுழற்சி வேகம் குறிப்பாக பூமியில் காந்தப்புலத்தை உருவாக்க உதவுகிறது. சுழற்சி வேகம் குறைந்தால், காந்தப்புலம் உருவாகாது. இது பூமியின் பல விடங்களுக்கு தடையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here