July 18, 2025
வெளிநாட்டு  கைக்குண்டுடன் சிக்கிய மீனவர்…!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

வெளிநாட்டு கைக்குண்டுடன் சிக்கிய மீனவர்…!

Jun 15, 2024

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் கிரந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உள்ஹிட்டிய பகுதியை சேர்ந்த 27 வயதுடைய மீனவர் கைக்குண்டு வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *