நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலை வேளையில் கொழும்பு உட்பட பெரும்பான்மையான பகுதிகளில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலையில் பனிமூட்டம் நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழையில்லாத வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.







