முதலில் ஒரு கிண்ணத்தில் ரோஜா பூ இதழ்களை பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் 1 அல்லது 2 தே. கரண்டி தேன் கலந்து அதை உதட்டில் தடவி  2 முதல் 3 நிமிடங்களுக்கு லிப் ஸ்க்ரப் போல மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர்  5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் உதட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு வாரத்தில்  3 முறை செய்து வந்தால், ஒரே வாரத்தில் உங்கள் கருப்பான உதடு இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிவருவதை கண்கூடாக அவதானிக்கலாம்.

ரோஜா பூ சருமத்தின் pH அளவை சீராக வைத்துக்கொள்வதுடன் சரும செல்களுக்கு  உள்ளிருந்து ஊட்டமளித்து கருமையை இயற்கையாகவே சீர் செய்ய துணைப்புரிகின்றது. மேலும், இது சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது.

தேன் இயற்கையாகவே இறந்த சரும கலன்களை வெளியேற்றுவதற்கு துணைப்புரிகின்றது. மேலும் உதடுகளை மென்மையாக நீரேற்றத்துடனும் வைத்திருக்க உதவுகின்றது. இவை இரண்டும் இயற்கையான பொருட்கள் என்பதால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here