கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதிக்கு அருகில் தங்கியிருந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுவரை உயிரிழந்தவர் தொடர்பில் தகவல் எதுவும் உறுதி செய்யப்படாத நிலையில், உயிரிழந்தவர் 60 முதல் 65 வயதுடைய மெலிவான உடல் தோற்றமும் 05 அடி 04 அங்குல உயரமும் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த நபர் கை சட்டை மற்றும் சிவப்பு நிற சாரம் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








