யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தினால் நவீன தொழில்நுட்ப முறையிலான  சொட்டு நீர்ப்பாசன மூலம் கத்தரி பயிரிடப்பட்டு நல்ல விளைச்சலை கண்டு வெற்றியடைந்துள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் நகரில் அமைந்துள்ள  விவசாய பீடத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமுதாய மேம்பாட்டு குழு ஏற்பாட்டில் கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் காணி உரிமையாளர் ஒருவருக்கு சுமார் மூன்று லட்சம் பெறுமதியான சொட்டு நீர் பாசன உபகரணங்கள் வழங்கி அவற்றினூடாக கத்தரி பயிர் செய்கை மேற்கொண்டு அவற்றின் அறுவடை விழா இன்று இடம் பெற்றது.

இவ் அறுவடை  விழாவிற்கு பிரதம அதிதியாக வடமாகணத்தின் பிரதமர் செயலாளர் திரு இ.இளங்கோவன் அவர்கள் பிரதம அதிதியாக  கலந்து கொண்டார்.

மேலத்திய நாடுகளில் குறைந்த நீரில்  விவசாயத்தை மேற்கொண்டு வருவதைப் போன்று இத்திட்டத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்.

இன் நிகழ்வில் பிரதம அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபர் ச.முரளிதரன், வடக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் ந.சுதாகரன், வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் செ.சுகந்தினி, யாழ் பல்கலைக்கழகத்தின் அறிவியல் நகரில் அமைந்துள்ள  விவசாய பீடத்தின் பீடாதிபதி , விவசாயிகள்  விவசாய பீடத்தின் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here