
மகளிர் உலகக் கிண்ணத்தில் இன்று பங்களாதேஷ் – பாகிஸ்தான் அணிகள் மோதல்!
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று (அக்டோபர் 2) நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணி மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணி ஒன்றுக்கெதிரொன்று மோதவுள்ளன.
போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.