Tuesday, July 28, 2026
No menu items!

சர்வதேச கிரிக்கெட்

மகளிர் உலகக் கிண்ணத்தில் இன்று பங்களாதேஷ் – பாகிஸ்தான் அணிகள் மோதல்!

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று (அக்டோபர் 2) நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணி மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணி ஒன்றுக்கெதிரொன்று மோதவுள்ளன. போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் – குமார தர்மசேன!

கிரிக்கெட் வீரர்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமெனவும், வரி செலுத்த வேண்டியிருந்தால், சட்ட ரீதியாக செயல்பட வேண்டும் என்றும் முன்னாள் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேன தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், "நான் தனிப்பட்ட ரீதியாக நினைப்பது என்னவெனில், நாட்டில் ஒரு சட்டம் இருந்தால், நாம்...

ஓய்வுவை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின்..!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று…

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.  குறித்த போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி டக்வர்த் லூயிஸ் முறையில் 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றும் சுமதி தர்மவர்தன என்பவரே, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை...

தன்னுடைய பிறந்தநாளில் சாதனை படைத்த ரஷீட் கான்!

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய பிறந்தநாளில் அதிகபட்ச விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற மாபெரும் சாதனையை தென்னாபிரிக்காவுடனான 2வது போட்டியின் போது ஆப்கானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கான் (5 விக்கெட்கள்) படைத்துள்ளார். இதற்கு முன் தென்னாபிரிக்காவின் பிலாண்டர், இங்கிலாந்தின் பிராட் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியுள்ளனர்.  
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img