மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (27.03.2025) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 24ஆம் திகதி ஆரம்பித்து, நேற்று (26.03.2025) நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் பணி நிறைவடைந்ததாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.








