வவுனியா சிதம்பரபுரத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சிதம்பரபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை 30.06.2024அன்று நிறுவப்பட்டது.
இச் சிலைக்கு சாந்திகுமார் நிரோஸ்குமார் அறக்கட்டளையினர் நிதிப்பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
குறித்த சிலையானது ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஆர். சௌந்தர்ராஜன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிலை நிறுவப்பட்டது.
அத்தோடு இக் குறித்த நிகழ்வுக்கு ஆலோசனையை சிவசிந்தை ஆர்.மாதவனும் சிலை அமைப்பை கருணாமூர்த்தியும் ஆசன அமைப்பை ரஞ்சனும் வழங்கியிருந்தனர்.










