இலங்கை வாகனத் துறையின் சீரான செயற்பாடுகளை உறுதி செய்வதற்கும், இறக்குமதியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் இருவருக்கும் நன்மை பயக்க தேவையான கொள்கை மாற்றங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என  இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIASL) பிரதித் தலைவர் அரோஷ ரொட்ரிகோ  கோரிக்கை விடுத்தார்.

நேற்று (2)ஊடகங்களைச் சந்தித்து கருத்து தெரிவித்த அவர், வாகன நிதி மற்றும் இறக்குமதி நடைமுறைகள் தொடர்பான தற்போதைய கொள்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளிடம் வாகன இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

தற்போதுள்ள ஒழுங்குமுறைகள் சந்தை திறனையும், வாடிக்கையாளர்களின் வாகன அணுகலையும் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வாகன இறக்குமதிக்கு 50% மேலதிக வரி விதிக்கப்பட்டிருந்தாலும், பல மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட முன்னோக்கிய  கோரிக்கை அடிப்படையில் தொடர்ந்து ஏற்றுமதிகள் வந்து கொண்டிருப்பதால், இறக்குமதி நடவடிக்கைகள் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வாகனத்தின் பெறுமதியில் 40% வரை மட்டுமே குத்தகை வசதிகளை வழங்கும் மத்திய வங்கியின் கட்டுப்பாடு, வாடிக்கையாளர்களின் வாகனம் கொள்வனவு செய்யும் திறனை குறைத்துள்ளதாகவும் துணைத் தலைவர் எடுத்துரைத்தார். அதற்கு மாற்றாக, இறக்குமதி செய்யும் போது L.C. மார்ஜின் முறையை பரிசீலிக்கலாம் என அவர் பரிந்துரைத்தார்.

மேலும், இந்தத் துறை அரசாங்க வரி வருமானத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாகவும், குறிப்பாக வாகனங்கள் துறைமுகத்திலிருந்து அனுமதிக்கப்படும் போது வரிகள் செலுத்தப்படுவதால், அன்றாட அரச செலவினங்களை பூர்தி செய்ய உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here