ஓபநாயக்க பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இம்புல்தென்ன பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது நண்பர்களுடன் நீச்சல் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






