சுகாதார சேவைளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  உத்தரவில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்  ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் போன்றவற்றில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, உணவு, சிகிச்சை போன்றவற்றிற்கு தேவையான அனைத்து சேவைகள், உழைப்பு அல்லது தேவையான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக அறிவித்து குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார பணியாளர்களின் வேலைநிறுத்தத்தினையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here