Friday, June 5, 2026
No menu items!

இலங்கை அரசியல்

ஜனாதிபதி அநுர மீண்டும் தெரிவு செய்யப்படுவதை தடுக்க முடியாது! சுனில் குமார கமகே

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2029-ல் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் சுனில் குமார கமகே குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தி, மக்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர், தவறான முடிவெடுக்கும் தன்மையால் இலங்கை முன்பு "திசையற்றதாக" மாறியிருந்ததாகவும், எனினும் தற்போதைய அரசாங்கம்...

நீதித்துறை நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் தலையீடு; எதிர்க்கட்சி குற்றசாட்டு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சமீபத்திய கருத்துக்கள் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (05) தெரிவித்துள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர். மே 25 அன்று நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிய பின்னர், தாம் கையை உயர்த்தத் தயாராக இருப்பதாக மே தினப் பேரணியில் ஜனாதிபதி கூறிய...

மஹிந்த ராஜபக்ஷவைக் கைது செய்வதா இல்லையா என்பதை ஜே.வி.பி முடிவு செய்யும்; நாமல்

இலஞ்ச,ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் (CIABOC) ஆஜராகுமாறு தற்போது வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, அறிவிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த எப்போது ஆஜராவார் என்பது குறித்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த நாமல், “அவர்...

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு சஜித் கோரிக்கை!

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறும்,மக்கள் தமது ஆணையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். கொழும்பு, மாளிகாவத்தையில் உள்ள பி.டி. சிறிசேன மைதானத்தில் நடைபெற்ற கட்சியின் மே தினப் பேரணியில் உரையாற்றிய அவர், ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்துவிட்டதாகவும்,இரு அணிகளும் கூட்டாக இணைந்து...

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு தடவைகள் கொடுப்பனவு வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவு விடயத்தில் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன,...

ரணில் வீட்டில் விசாரணை; கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரீ விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு திடீரென சென்றமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கண்டனம் வெளியிட்டுள்ளது. விக்ரமசிங்க தற்போது இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்...

நிலக்கரி இறக்குமதி விவகாரம்; கணக்காளர் நாயகத்தின் அறிக்கையை நிராகரிக்கும் அமைச்சர்

சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி தொடர்பாக கணக்காளர் நாயகத்தின் அறிக்கையின் சில பகுதிகளுடன் தாம் உடன்படவில்லை என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். “அறிக்கையில் உள்ள சில விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.” ஆனால், முழு அறிக்கையும் தவறானது என கூறவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நிலக்கரியைக் கொள்முதல் செய்வதில் எந்த...

அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் உள்ளது; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

நாட்டின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தாண்டு திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார். "அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு எங்களிடம் ஒரு பெரிய திட்டம் உள்ளது. நிச்சயமாக மாற்றம் நிகழும்," என...

இந்திய பிரதி ஜனாதிபதி-ஜனாதிபதி அனுர ஆகியோர் சந்திப்பு

இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (19) கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார். இந்தியா-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும், பகிரப்பட்ட வரலாறு, நாகரிகத் தொடர்புகள் மற்றும் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தினர் என...

எரிசக்தி அமைச்சர் பதவி விலகல்; ஜனாதிபதி மீது பொறுப்பை சுமத்தும் நாமல்

நிலக்கரி கொள்முதல் விவகாரத்தை தொடர்ந்து எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தாமதமாகவே பதவி விலகியுள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார். ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றம் ஒரு நாள் முழுவதும் விவாதித்த போதிலும், தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதற்கு...
- Advertisement -

Latest News

ரன்வீருக்கு விடுத்த தடையை திரும்ப பெற்ற திரைத்துறை அமைப்பு

மேற்கு இந்திய சினிமா பணியாளர்களது கூட்டமைப்பு (FWICE), நடிகர் ரன்வீர் சிங்குக்கு எதிராக பிறப்பித்திருந்த ஒத்துழையாமை (அவருடன் பணியாற்ற வேண்டாம் என்ற) உத்தரவை (NCD) திரும்பப்...