இன்று எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான  சஜித் பிரமதாஸ அவர்கள் கொழும்பு தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதியில் குருக்கள் மடம் பிரதான காரியாலயத்தில் இந்நிகழ்வு கொண்டாடப்படவுள்ளது.

ஜக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவரும் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு நடைபெற்றவுள்ளது.

இந் நிகழ்வில் ஜக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட முகாமையாளர் சிறீஸ்குமார் அவர்களும் ஐ.ம.ச மட்டக்களப்பு மாவட்ட பிரதான செயலாளர் ஜோன் கெனத் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் பிரச்சார அமைப்பாளர்கள் மகளீர் அமைப்பாளர்கள் இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஊடக அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் பிரசண்ணமாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here