பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.

 வீட்டிலிருந்தபடியே முகப்பொலிவை அதிகரிக்க உதவும் பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

  1. தேவையான பொருட்கள்
  • சர்க்கரை படிகம்- 1 ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர்- சில துளிகள்

பயன்படுத்தும் முறை

சர்க்கரை படிகங்களை ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்டை உருவாக்கவும்.

பின் இந்த பேஸ்ட்டை முகத்தில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும்.

அடுத்து 2-3 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவி உலர்த்தவும்.

இது இறந்த சருமத்தை நீக்கி, உங்கள் முகத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவுடனும் உணர உதவும்.

  1. தேவையான பொருட்கள்
  • மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
  • தேன்- 1 ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர்- சில துளிகள்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், தேன் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும்.

பின் இந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இந்த பேக் சருமத்தின் பொலிவை அதிகரித்து, புத்துணர்ச்சியுடன் தோற்றமளிக்கும்.

  1. தேவையான பொருட்கள்
  • அரிசி மா- 2 ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர்- சில துளிகள்
  • உருளைக்கிழங்கு சாறு- 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

அரிசி மாவுடன் ரோஸ் வாட்டர் மற்றும் உருளைக்கிழங்கு சாறு சேர்த்து கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.

இதனை முகம் மற்றும் கழுத்தில் சமமாக தடவி 25 நிமிடங்களுக்கு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இந்த பேக் மந்தமான தன்மையைக் குறைப்பதற்கும், பளபளப்பான, சீரான நிறத்தை வழங்குவதற்கும் உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here