சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது வாக்குகளை வீணாக்குவதை விடுத்து எமக்கு வாக்களிக்க வேண்டும். விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பது என்பது அநுர திஸாநாயக்கவுக்கு வாக்களிப்பதாகும். திசாநாயக்கவுக்கு வாக்களிப்பது, பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு ஆதரவான வாக்களிப்பாகும்”என்று தெரிவித்துள்ளார்.
“விக்கிரமசிங்கவின் சமீபத்திய அறிக்கைகள், அவர் தனது வெற்றியில் உறுதியாக இல்லை என்பதையும், அவருக்கும் திஸாநாயக்கவுக்கும் ஒருவித புரிதல் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்தியது” என்று பிரேமதாச மேலும் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசத்தை அபிவிருத்தி செய்யும் என்று திசாநாயக்க மற்றும் விக்கிரமசிங்க இருவரும் பயப்படுகிறார்கள். நாங்கள் வீடுகளை நிர்மாணிப்போம் என்று அவர்கள் பயப்படுகிறார்கள், அனைத்து அரசு பள்ளிகளையும் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றுவோம் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். நாங்கள் சுகாதாரத் துறையை மேம்படுத்துவோம் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். ” என்றும் கூறினார்.







