இலங்கையில் உள்ள அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரஜைகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஆலோசனையை நீக்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அக்டோபர் 23 ஆம் திகதி, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க குடிமக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை அறுகம் விரிகுடாவிற்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பாதுகாப்பு ஆலோசனையை வழங்கியது.

இதேவேளை, இது தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர், (ஓய்வு) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா இந்த வார தொடக்கத்தில் கிழக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, அறுகம் குடாவின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பீடு செய்தார்.

உள்ளூர் இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், அறுகம் குடா உட்பட இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இச்செயற்பாட்டின் போது, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பில் நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், அவர்களின் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here