புத்தளம், கற்பிட்டி, முசல்பிட்டி பிரதேசத்தில் கடந்த 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 442,680 போதை மாத்திரைகள் அடங்கிய 18 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








