
அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கொள்ளுப்பிட்டி கிரெஸ்கட் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (03) குதித்து தன்னுயிரை மாய்த்துக்கு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் 51 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரட்டைக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர் கட்டிடத்தின் 7வது மாடியில் தற்காலிகமாக தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







