அவசர அறிவுறுத்தல்! உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டு உயர்தரப்பரீட்சை எழுதும் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளில் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். எனவே அருகிலுள்ள வலயக்கல்வி அலுவலகத்திற்கோ அல்லது 1911 என்ற குறுந்தகவல் எண்ணிற்கோ தகவல் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்தரப்பரீட்சை எழுதும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட
ஆடையகத்தில் இரகசிய கமரா: உரிமையாளரிடம் சிக்கிய காணொளிகள் கொழும்பு புறநகர் பகுதியில் சம்பவம்!
கொழும்பின் புறநகர் தலவதுகொடையில் அமைந்துள்ள ஒரு ஆடையகத்தின் உரிமையாளரினை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலங்கம பொலிஸாரின் கூற்றுப்படி, நேற்று கடையின் ஆடை மாற்றும் அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கமராவை அதிகாரிகள் கண்டுபிடித்ததையடுத்து உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வாளர்கள் விசாரணையின் போது தெரியவந்தது மேலும் சந்தேகநபருக்குச் சொந்தமான ஒரு கையடக்கத்தொலைபேசியினை பரிசோதித்தபோது, அறைக்குள் பதிவு செய்யப்பட்ட 201 காணொளிகள்
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்..!
தென்கொரியாவில் அவசரநிலை இராணுவச் சட்டத்துக்கு பரிந்துரைத்ததற்காக கைதான அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யாங் ஹயூன் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மார்ஷல் சட்டத்திற்கு தான் பொறுப்பேற்பதாக அறிவித்திருந்த அமைச்சர் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை உயிரை மாய்ப்பதற்கு முயன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரியாவை உலுக்கிய மார்ஷல் சட்டத்தின் பின்னர் இவர் ஏனைய
ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதிக்கும் சபாநாயகர்..!
சபாநாயகர் அசோக ரன்வல ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளதாக தெரிவித்த கருத்து பொய்யானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். போலி முனைவர் பட்டம் என்பது ஆசியாவிலேயே மிகப் பழமையான பாராளுமன்றத்தையும் இந்த ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதிக்கும் செயலாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. “இலங்கையின் பாராளுமன்றம் ஆசியாவிலேயே முதன்மையானது மற்றும் முழு
சிரியா அரசிற்கு இடைக்கால பிரதமர் நியமனம்..!!
சிரியா அரசின் இடைக்கால பிரதமராக முகமது அல் பஷீர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் மார்ச் 1, 2025 வரை அமுலில் இருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் முன்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்தின் தலைவராக பணியாற்றினார். சிரியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்த அல்-அசாத், கடந்த 8-ம் திகதி பதவியை விட்டு வெளியேறி நாட்டை விட்டும் வெளியேறினார்.
வட் வரியால் பாதிக்கப்பட்டுள்ள புத்தகத் துறை..!
புத்தக வெளியீட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வட் வரியை (VAT Tax) விரைவில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பிரேரணையை அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு பரிந்துரைப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்க தெரிவித்தார். “அரசாங்கத்திற்கு சில வாரங்களே உள்ளன. இந்த நேரத்தில் கோரிக்கைகளை
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு..!!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.50 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.19 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின்
பெருந்தோட்ட மக்களின் வீட்டுத் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்..!
பெருந்தோட்டங்களில் தனி வீட்டுத் திட்டங்களுக்குப் பதிலாக மாடி வீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் தேயிலை நிலங்களைப் பாதுகாத்துக் கொண்டு பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் நோக்குடன் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக
ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு..!
இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் மின்சார சபை ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குவதால் மின் கட்டண குறைப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்குக் கடந்த இரண்டு வருடங்களாக ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவில்லை. எனவே, டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக அவர்களுக்கு ஊக்குவிப்பு
பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு இலங்கையை தாக்கிய மோசமான வானிலை!
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தப் பேரழிவுகளால் இதுவரையிலும் மொத்தமாக 639 பேர் உயிரிழந்துள்ளதுடன், 203 பேர் காணாமல்போயுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்பு மையங்கள் அனர்த்தங்களின் விளைவாக, 5 ஆயிரத்து 350 வீடுகள் முழுமையாகவும், 86 ஆயிரத்து 882 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைப்பதற்காக நாடு