இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,599 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல் மாகாணத்தில் 20,519 பேர் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12,030 டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here