எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது.
அவர் வருகை தந்திருந்த வேட்பாளர் மத்தியில் உரையாற்றும் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால நோக்கு தொடர்பில் விளக்கமளித்ததோடு, வரவு செலவுத்திட்ட விவாதத்தின் இறுதியில் ஜனாதிபதி ஆற்றிய உரையில், ஐக்கிய மக்கள் சக்தி மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதில்களையும் தெரிவித்துள்ளார்.







