Friday, May 1, 2026
No menu items!

Priya

பல்கலைக்கழக மாணவன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு..!

அநுராதபுரம் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் கடந்த புதன்கிழமை (21.11.2024) கொழும்பு ஜம்பட்டா தெருவில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் மலசலகூடத்தில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்ததாவது, அனுராதபுரம், ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவன் ஒருவனே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த பல்கலை மாணவன் கொழும்பு மருதானை பிரதேசத்தில்...

புல்கமுவ ஓயாவில் ஜீப் வண்டி பாய்ந்ததில் இரு சகோதரர்கள் பலி..!

குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் குளியாப்பிட்டியவிலிருந்து ஹெட்டிபொல நோக்கிச் சென்ற ஜீப் வண்டியொன்று புல்கமுவ ஓயாவில் பாய்ந்ததில் இன்று (23.11.2024) காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரேன் உதவியுடன் ஆற்றில் வீழ்ந்த ஜீப் வண்டியை மேலே இழுத்ததில் வாகனத்தில் சிக்கிய இருவர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள்...

தன்னை உடனடியாக வடக்கில் இருந்து இடமாற்றம் செய்யவும் என வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம்.ஹனிபா கோரிக்கை…

எனது  உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்  ஆசாத் எம்.ஹனிபா  மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரிடம் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு நேற்றையதினம் (22.11.2024) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார்...

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு தொடர்பில் வெளியான அறிவித்தல்..!

பத்தாவது நாடாளுமன்றதிற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு 2024 நவம்பர் மாதம் 25, 26 மற்றும் 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01ல் நடத்தப்படவுள்ளது. புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக இந்த திசைமுகப்படுத்தல் செயலமர்வு இம்முறையும் ஏற்பாடு...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்ட அவசர நிலை குறித்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை…

'துயரங்களுக்கு வன்முறைகள் பதிலாகாது' மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்ட அவசர நிலை குறித்து மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் ,துணை மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதியர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள், நோயாளர் காவு வண்டி சாரதிகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் இணைந்து நேற்றைய தினம் (22.11.2024) அறிக்கை ஒன்றை...

IMF–இன் மூன்றாவது மீளாய்வு தொடர்பில் வெளியாகவுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை..!

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (23.11.2024) காலை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வௌியிடவுள்ளனர். மூன்றாவது மீளாய்வை நிறைவு செய்வதற்காக பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பணியாளர் அளவில் உடன்பாட்டிற்கு வந்தமை தொடர்பில் இதன்போது அறிவிக்கப்பட உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்...

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு..!

நேற்று முன்தினம் (21.11.2024) பாராளுமன்ற அமர்வில் பேஸ்புக் நேரலை மூலமாக வைத்தியர் அர்ச்சுனா சர்ச்சைக்குரிய வார்த்தைப் பிரயோகங்களை முன்வைத்திருந்தார். இது குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் அரகலய போராட்டத்தின் உறுப்பினர்களும் சுயார் சட்ட வல்லுநர்களும் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளனர். இதன்போது கருத்து தெரிவித்த முறைப்பாட்டாளர்கள், வைத்தியர் அர்ச்சுனாவின் செயலானது இலங்கை அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் முரணானது. அர்ச்சுனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

இன்றைய நாளுக்கான வானிலை…

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (23.11.2024) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில்...

CID தமக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் அரசியல் பழிவாங்கல் – பிள்ளையான் தெரிவிப்பு…

2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பிரித்தானிய ஊடகமான சனல் 4 இன் ஆவணப்படம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தமக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் அரசியல் பழிவாங்கல் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிள்ளையான், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்க திணைக்களமொன்று விசாரணைகளை...

About Me

7769 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img