Monday, May 25, 2026
No menu items!

வர்த்தகம்

சற்றே வலுப்பெற்ற இலங்கை ரூபா

கடந்த சில நாட்களாக கணிசமாக மதிப்பிழந்திருந்த இலங்கை ரூபாய், இன்று (22) இலங்கையில் சகல வர்த்தக வங்கிகளிலும் அமெரிக்க டொலருக்கு நிகராக சற்று வலுப்பெற்றுள்ளன . எனினும், விற்பனை விகிதம் ரூ. 350-க்கு மேல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. செலான் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 342.75 மற்றும் ரூ....

மத்திய கிழக்கு மோதல் காரணமாக இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் சரிவு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருவாய் 17.3% சரிந்து $114.75 மில்லியனாகக் குறைவடைந்துள்ளது. ஈராக்கிற்கான ஏற்றுமதி 38% சரிந்துள்ளதோடு ஐக்கிய அரபு அமீரகத்திற்கான ஏற்றுமதி 93% சரிந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தேயிலையில் சுமார் அரைப்பங்கை, (சுமார் $680 மில்லியன்), மத்திய கிழக்கு நாடுகள் கொள்வனவு செய்கின்றன. இந்நிலையில் தற்போது...

இலங்கையில் அறிமுகமாகும் பேபால் சேவைகள்!

இலங்கையின் முன்னணி வங்கிகளின் அனுசரணையுடன் நாடு தழுவிய ரீதியில் பேபால் சேவை தொடங்கப்படுவதாக இலங்கையின் வங்கி துறை அறிவித்துள்ளது. இதனூடாக இலங்கையின் வங்கித் துறை இன்று டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய படியை எடுத்து வைத்துள்ளது. இந்த அறிவிப்பு நிகழ்வில், கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் தலைவர்கள் கலந்துகொண்டனர். சர்வதேச டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான...

கணிசமாக அதிகரித்த தங்கத்தின் விலை

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (06) கணிசமான அளவு அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை 4,648 அமெரிக்க டொலராக அதிகரித்தது. கொழும்பு கோட்டை தங்கச் சந்தையில் இன்று காலை 8.00 மணி வரையான நிலவரப்படி 7,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இதற்கமைய 22 காரட் தங்க பவுனின் விலை ரூ. 363,400...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (10) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 24 சதம், விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 75 சதம்.

தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி..!!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தென்னை உற்பத்தித் துறையில் மாற்றம் தரும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். வடக்கு தென்னை முக்கோண வலய அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையின்...

எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்..!!

ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலை 3,690 ரூபாயுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 5 கிலோகிராம் நிறையுடைய...

உலக சந்தைகளில் அதிகரித்துள்ள உரவிலைகள்!

உலக சந்தைகளில் உரவிலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் உள்நாட்டிலும் காணப்படுவதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த் தெரிவித்துள்ளார். மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை கூறியுள்ளார். உர விலைகள் உயர்வது ஒரு பொது சவாலாக இருந்தாலும், சலுகை விலையில் உரங்களை வழங்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என...

14 ஆண்டுகளுக்கு பின் வெள்ளி விலை உச்சம்!

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சுமார் 14 ஆண்டுகளின் பின்னர் பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகச் சந்தைத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க வரிக் கொள்கை, மற்றும் தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளமை என்பன இதற்கான காரணங்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3 வீத அதிகரிப்புடன், 39.40 டொலர்களாக விற்பனை செய்யப்படுகிறது. இது,...

இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (9) அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.62 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.39 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை...
- Advertisement -

Latest News

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம்...