Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

ஈரான் கண்டனம் சிட்னியில் நடத்தப்பட்ட தாக்குதல்..!!!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பொன்டாய் கடற்கரையில் நடத்தப்பட்ட தாக்குதலை ஈரான் கண்டித்துள்ளது. பயங்கரவாதமும் மக்களைக் கொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். இவ்வாறான செயல்கள் எங்கு நடந்தாலும் அதனை ஈரான் கண்டிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிட்னியில் உள்ள பொன்டாய் கடற்கரையில் நேற்று(14.12.2025) கூடியிருந்த மக்களை...

அரச பேருந்தில் செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது..!!

நவம்பர் மாதத்திற்கான பயண அட்டையைப் (Season card) பயன்படுத்தி, இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பாடசாலை மாணவர்களுக்கு பயணிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் வழங்கப்பட்ட பயணச் சீட்டை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். மேலும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

கிழக்குப் பிராந்தியத்தில் காணப்படும் அலைவடிவிலான காற்றின் தாக்கம் காரணமாக நாளை(16.12.2025) முதல் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிளும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...

நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு பெண்ணின் புகைப்படத்தை இணையத்தில் முறைகேடாக மாற்றிய மாணவி..!!!

கொழும்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் புகைப்படங்களை டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி ஆபாசமான படங்களாக மாற்றி இணையத்தில் வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட இளம் பெண் ஒருவருக்கு கொழும்பு தலைமை நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று ரூபா 50,000 நட்டஈடு மற்றும் ரூபா 5,000 தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட...

போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை..!!

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தங்களது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் கூறியுள்ளார். பண்டிகை காலங்களில்  போலி நாணயத்தாள்களின் புழக்கம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை..!!

இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடைமையாக்குவதற்குமான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போலீஸ்  ஊடகப் பேச்சாளர், எஃப்.யூ. வுட்லர் இதனைக் கூறியுள்ளார். அதன்படி கடந்த மற்றும் நடப்பு ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் 354 பவுண் தங்கம், 77 வாகனங்கள், 35 கோடி ரூபா பணம் மற்றும் நூறு கோடிக்கும் அதிக...

கைது முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல!!!..

சாலை விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல. சப்புகஸ்கந்த பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப், கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சிக்கிய  சபாநாயகர் சபுகஸ்கந்த டெனிமல்லா பகுதியில் நேற்றையதினம் (11.12.2025) இரவு 7.45 மணியளவில் இந்த...

மண் சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு..!!!

நுவரெலியா ரம்பொட வழியாக கண்டி வீதியை இரவு வேளைகளில் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் நேற்று(11.12.2025) இரவு விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே இதனை கூறியுள்ளார். தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் கற்பாறைகள் மற்றும்  மண் மேடுகள்...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

இன்று 12.12.2025 பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (12.12.2025) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் சுமார் 50...

மருத்துவம் ஆரம்பம் டித்வா சூறாவளியின் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு..!!!

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ணை விலங்குகளுக்குச் சிகிச்சை வழங்கப்பட்டற்காக, அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் நாளை(13.12.2025)முதல் மூன்று நாள் நடமாடும் மருத்துவமனையை மன்னாரில் தொடங்கவுள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரஞ்சித் குமார இதனைத் கூறியுள்ளார். மன்னார் மாவட்டத்தில்  நடந்த கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடை வளர்ப்பாளர்களுக்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும்...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...