Thursday, July 2, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

துறைமுக நிர்மாணப் பணிகளுக்கான விலைமனு கோரப்பட்டுள்ளது..!

மன்னார் துறைமுக முனைய நிர்மாணப் பணிகளுக்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மன்னார் துறைமுகத்தில் 300 மீட்டர் நீளமான முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S. ருவன்சந்திர தெரிவித்துள்ளார். இதற்காக உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முனையத்தின் நிர்மாணப் பணிகளின் பின்னர் இந்தியா...

வழமைக்கு திரும்பிய பாடசாலை செயற்பாடுகள்…!

அதிபர், ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்ததை அடுத்து  பாடசாலைகள் வழமை போன்று திறக்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழமை போன்று பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அதிபர், ஆசிரியர்களின் சங்கங்கள் அண்மைக்காலமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும், சில பாடசாலைகளின் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வடமேல் மாகாணத்தில் மாத்திரம்...

இரண்டு வங்கிகளுக்கு அபராதம்!!!

இலங்கையிலுள்ள இரண்டு தனியார் வங்கிகளுக்கு  இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது. சம்பத் வங்கி பிஎல்சீ மற்றும் டிஎப்சிசி வங்கி பிஎல்சி ஆகிய இரண்டு வங்கிகளுக்கே மத்திய வங்கி இவ்வாறு அபராதம் விதித்துள்ளது. அதன்படி சம்பத் வங்கிக்கு இருபது இலட்சம் ரூபாயும், டிஎப்சிசி வங்கிக்கு பத்து இலட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நிதியியல் கொடுக்கல் வாங்கல் அறிக்கையிடல் சட்டம் மற்றும்...

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்..!

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்றைய தினம்(25) முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் காலை 10.00மணிக்கு கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச விசாரணைதேவை, இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற போன்ற கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை…!

காலி பிரதேசத்தில் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்பகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 51 வயதுடைய நபரொருவரே தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ள நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கண்டறியப்படாத நிலையிலே இது தொடர்பான...

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்…

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் வவுனியா, மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பத்தில் தந்தை வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள நிலையில் தாயார் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வருகின்றார். தாயார் கூலி வேலைக்கு...

குடல் அலர்ஜி நோயினால் பறிபோன உயிர்..!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில்  சிறுவன் ஒருவர் குடல் அலர்ஜி நோயினால் நேற்றையதினம்(22)  உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. அச்சுவேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கபிலன் கபிசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவனுக்கு நேற்றுமுன்தினம் (21) திகதியில் இருந்து வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவன் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நேற்று அதிகாலை நான்கு மணியளவில்...

எல்லை தாண்டிய மீனவ விவகாரம் ஜெய்சங்கருடன் பேசாமை கவலையளிக்கிறது..!

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி விவகாரம் தொடர்பில் இந்திய வெளிவிவகார  அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கருடன் ஒரணியாக பேசாமை கவலை அளிப்பதாக அடக்குமுறைகளுக்கு எதிரான அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா நேற்று(22) சனிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்  தெரிவிக்கையில் இந்த வாரம் இந்தியாவினுடைய...

ஒன்பது லட்சம் பெறுமதியான தங்கம் மீட்பு..!  

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் மேற்கு பகுதியில் வீடு ஒன்றில் நண்பர்களால் களவாடப்பட்ட ஒன்பது லட்சம் பெறுமதியான தங்கம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மகனுடன் நண்பர்கள் இருவர் வீட்டுக்கு வருகை தருவது வளமையான ஒன்றாகும் கடந்த 16 அன்று வீட்டில் வைப்பட்ட நகையை தேடிய போது நகை காணாமல் போயுள்ளதுடன் மேலும் தேடியபோது நகையை காணவில்லை என வீட்டின்...

தெங்கு உற்பத்திகளின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

கடந்த வருடத்தை விட இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் தெங்கு தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 20% அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, 330 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...