Wednesday, July 1, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

கொழும்பில் இரண்டு நாட்களில் 20 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன..!

கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 20 மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. இவ்வாறு முறிந்து விழுந்த மரங்களில் ஆபத்தானவை அல்ல என அடையாளப்படுத்தப்பட்ட மரங்களும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. கொழும்பு நகர எல்லைக்குள் சுமார் 200 ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இதுவரை 100 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை காணிகள் இந்திய நிறுவனத்திற்கு..!

மன்னார் - நடுக்குடா பகுதியில் உள்ள தமிழர்களின் குடியிருப்புக் காணி உட்பட 160 ஏக்கர் நிலம் மணல் அகழ்விற்காக இந்திய நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, குறித்த நிலப்பரப்பைச் சுற்றிலும் கொங்கிரிட் தூண்கள் மற்றும் முற்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மணல் அகழ்விற்காக இந்தப் பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சுமார்...

இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு..!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் 2.5 சதவீதமாக காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. மார்ச் மற்றும் பெப்ரவரி...

இன்றைய வானிலை..!

நாடு முழுவதிலும்  தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றமையால்  நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையையும் தொடரக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென்  மாகாணங்களில் அடிக்கடி மழை...

வவுனியா மாவட்ட சம்மேளன தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு!!

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராகவும் தெற்காசியாவின் மிகப்பெரிய இளைஞர் கழக சம்மேளனமான இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் வவுனியா மாவட்ட தேசிய பிரதிநிதியாகவும் கணேசலிங்கம் சிம்சுபன்  தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய...

பெண் ஒருவர் போதைப்பொருளுடன் கைது..!

பாகிஸ்தானை சேர்ந்த  57 வயதான பெண் ஒருவர் 2 கிலோ 450 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தனது சூட்கேஸின் அடிப்பகுதியில் மறைத்து வைத்துள்ள நிலையில்  கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் கீழுள்ள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஹெரோயின் 7 கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என...

இருவருக்கிடையே ஏற்பட்ட மோதல்: தீப்பற்றிய வீடு!!!

  பசறை டெமேரியா (ஏ) தோட்டம் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த  25 மற்றும்30 வயதுடைய இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பின்னர் கைக்கலப்பாக மாறியதில் ஒருவர் குறித்த வீட்டுக்கு தீவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு 10.30 மணியளவில் நடைபெற்றது. குறித்த சம்பவத்தில் தீயினால் வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் இருவர்  காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த...

ரூபாவின் பெறுமதி..!நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையுமானால் அதனை முகாமை செய்வதற்கான இயலுமை இலங்கை மத்திய வங்கியிடம் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவான நிலையில் உள்ளது. இந்த நிலையில்,...

 இன்றைய வானிலை !!!

இலங்கையில்ம் தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்திணைக்களம் எச்சரித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர்அளவில் பலத்த மழை பெய்யக்கூடும். இவ்வாறு வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை...

இலங்கையில் இன்றைய தங்கவிலை நிலவரம்..

இலங்கையில் இன்று (20) தங்கத்தின் விலையானது 24 கரட் ஒரு கிராம் தங்கம் 25,800 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் ( ஒரு பவுண்) தங்கம் 206,350 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. அதோடு ,22 கரட் ஒரு கிராம் தங்கம் 23,650 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் தங்கம் 189,200 ரூபாவாகவும் உள்ளது. மேலும்...
- Advertisement -

Latest News

வில்பத்து தேசிய பூங்காவில் கரை ஒதுங்கிய டொல்பின்

வில்பத்து தேசிய பூங்காவின் கொல்லன்கனட்ட பகுதியில் நேற்று மாலை (30) உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரை ஒதுங்கியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். வில்பத்து தேசிய...